About Me

My photo
India
என் பெயர் கா.சவதா என் பிறந்த ஊர் ஆம்பூர். நான் +2 வரை படித்திருக்கிறேன்.எனக்கு பிடித்தவை; கலைமகள்,சக்தி, போன்ற புத்தகங்களை படிப்பது வீடியோ கேம், நண்பர்களுடன் விளையாடுவது, போன்றவை எனக்கு பிடிக்கும். எஸ்.ஜே.எஸ்.ஆர் ஒய் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி மூலமாக சாப்ட்விஷன் மல்டிமீடியா கணினி மையத்தில் இலவச கணினி பயிற்ச்சி பயின்று வருகிறேன்.

Monday, September 27, 2010

இலக்கிய சுற்றுலா இன்ப சுற்றுலா!!



சுற்றுலா என்பதுமே நம் கண்முன் நிற்பவை மலர் கண்காட்சி,ஊட்டி,கொடைகானல், மாமல்லபுரம், மெரினாபீச், முதுமலை சரணாலயம் போன்றவை நம் கண்முன் சிறகடித்து பறக்கக் கூடியவை. ஆனால் 



இந்த சுற்றுலா சற்று மாறுபட்டதாக அமையும் அதையும் காண்போம்.





சுற்றுலா இல்லாத வாழ்க்கை பூங்காற்று இல்லாத பூங்கா,நீர்ல்லாத அருவி,கனியில்லாத மரம்,கவிதையில்லாத இலக்கியம் ஒரே இடத்தில் நடந்த சம்பவங்களை கொண்டு எழுதப்பட்ட எதுவும் உலக 

இலக்கியமாக உயர்வு பெறவில்லை. இலியட்,ஒடிசி ஆகிய இரண்டு மகாகாவியங்களுமே பல இடங்களுக்குப் பயணம் செய்த அனுபவப்பிழிவுகளின் சாரங்கள். சைரன்களின் இசையையும் நுகர வேண்டும். 
தடமும் மாறக்கூடாது என்ற திடமான உள்ளத்தால் 'யுலிசிஸ்'தன்னை கட்டிப்போட வைத்து வீரர்களின் காதில் பஞ்சடைத்து அந்த இசையை நுகர்ந்ததாக ஒடிசி உரைக்கிறார்.
ஷேக்ஸ்பியரின் அத்தனை மகாகாவியங்களுமே இடம்விட்டு இடம்பெயர்ந்த சம்பவங்களை மையமாக வைத்தே எழுதப்பட்டவை.'டெம்பஸ்ட் 'நாடகத்தில் காலனி ஆதிக்கம் குறித்தும், பெர்முடா முக்கோணம் குறித்தும் பூடகக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.சொர்கத்திலிருந்து நெருப்பை மனிதர்களுக்கு கொண்டுவந்து கொடுத்ததால் 'புரோமத்தியஸ்' சபிக்கப்பட்டதாக கிரேக்கப் புனைவியல் கூறுகிறது;

சுற்றுலாவின் வகைகள் :
(1) அலையகச் சுற்றுலா
(2)மலையக சுற்றுலா
(3)கலையக சுற்றுலா
(4)வரலாற்றுச் சுற்றுலா
(5)வர்த்தகச் சுற்றுலா
(6)மருத்துவச் சுற்றுலா
(7)மனமகில் சுற்றுலா
(8)ஆய்வுச் சுற்றுலா
(9)ஒய்வுச் சுற்றுலா
(10)பண்பாட்டுச் சுற்றுலா
(11)பாரம்பரியச் சுற்றுலா
(12)சுற்றுச் சூழல் சுற்றுலா
(13)இலக்கியச் சுற்றுலா
(14)இதிகாசச் சுற்றுலா
(15)கல்விச் சுற்றுலா
(16)தொல்வியல் சுற்றுலா
(17)ஆன்மீகச் சுற்றுலா
(18)சமயச் சுற்றுலா
(19)கானகச் சுற்றுலா
(20)ஊரகச் சுற்றுலா
(21)விளையாட்டுச் சுற்றுலா
(22)வீரதீரச் சுற்றுலா
(23)சாகசச் சுற்றுலா
(24)புனைவியல் சுற்றுலா
(25)பொழுது போக்குச் சுற்றுலா
(26)அருவிச் சுற்றுலா
(27)ஆரவாரச் சுற்றுலா
(28)பண்டிகைச் சுற்றுலா
(29)பலகாரச் சுற்றுலா 

என்று எண்ணற்ற சுற்றுலாக்கள் இடம்பெற்றுள்ளன.

கம்ப இராமாயணத்திலே இவற்றில் பல சுற்றுலாக்களைப் பார்க்க முடியும். இராமன் விசுவாமித்திரரோடு காட்டுக்குச் சென்றது சாகசச் சுற்றுலா. வல்லை உடைத்துப் பலத்தை நிருபித்தது விளையாட்டுச் சுற்றுலா தந்தையின் வாக்கைக் காப்பாற்ற மேற்கொண்டது கானகச் சுற்றுலா.கடந்தது கங்கை சுற்றுலா சீதைக்காக மானை பிடிக்க முயன்றது சுற்றுச் சூழல் சுற்றுலாவைப் பேண மறந்ததால்தான், 

இராவணனோடு வீரதீரச் சுற்றுலா செல்வதற்காக இராமநாதபுரத்தில் நடத்திய வழிபாடு ஆன்மிகச் சுற்றுலா. அதற்குப்பின் கடலைக் கடக்க அலையகச் சுற்றுலா சென்று, இந்திஜித்தன் அம்பில் மயங்க
அவர்களை எழுப்பும்பொருட்டு அனுமன் மருத்துவச் சுற்றுலாவுக்காகசஞ்சீவி மூலிகையைக் திரும்பிவர இறுதியில் தாயகம் திரும்பும் பயணமாய் அந்த இதிகாசம் இனிதே முடிகிறகு.

இராமாயணம் முழுமையுமே இனிய இயற்கை காட்சிகள் பதிவு செய்யப்பட்டு நம்மை இயற்கை சுற்றுலாவிற்கு அழைத்திச் செல்லும் முயற்சியாகவே தோன்றுகிறன.'தண்டரை மயில்களாட தாமரை 
விளக்கம் தாங்க' என்பதைப் படிக்கும் போது நம் மனக்கண் முன்பு இப்படியொரு எழில் வாய்ந்த இடத்தைப் பார்க்கமாட்டோமா என்று உள்ளம் பரிதவிக்கிறது ..
தமிழகத்தின் இலக்கியச் சுற்றுலாத் தலங்கள்:

சென்னையில் வள்ளுவர்கோட்டமும், குமரிமுனையில் திருவள்ளுவரின் பிரம்மாண்ட சிற்பமும் செவிகளில் திருக்குறளை எதிரொலிக்கச் செய்யும் முயற்சிகள்.அங்கு வந்துபோகிற 




ஒவ்வொருவரும் "ஆல்பர்ட் ஸ்வைட்ஸர்' திருக்குறளை பற்றி கூறிய கருத்துக்களை நினைத்துக்கொள்வர்.  


பூம்புகார், பட்டினப்பாலையில் இடம் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்தை நினைவுபடுத்துகிறது. இங்கு நடக்கும் இந்திர விழா.




'திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோலதுவோச்ச
கங்கைதன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணா
கங்கைதன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
மங்கைமாதர்ப் பெருங்கற்பென்
றறிந்தேன் வாழி காவேரி'

என்கின்ற கானல் வரிகள் கோவலன்-மாதவிக்குள் கோணல் வரிகளாய் மாறிய சிலப்பதிகாரச் சிந்தையை நினைவுபடுத்தும். 




குற்றாலத்தை நெருங்கும் போதெல்லாம் ''வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் 
மந்திசிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கொஞ்சும்'' என்ற குற்றாலக் குறவஞ்சிப் பாடல் நமக்குள் அருவியின் குளிர்ச்சியை ஏற்படுத்தும். அருவி என்கின்ற அழகான தமிழ்ச்சொல் இருக்க நீர்வீழ்ச்சி என்கிற ஆங்கில எச்சத்தை உச்சத்தில் வைக்கும் நண்பர்களைப் பார்த்துச் சொல்லும் கவிஞர் விக்ரமாதித்யன் வரிகள் நெஞ்சில் நிழலாடும்.

''நெஞ்சு படபடக்கிறது
நீர்வீழ்ச்சியென்று
அருவியை யாராவது சொல்லிவிட்டாள்''
பிரான்மலை என்று அழைக்கப்படுகின்ற புறம்புமலை,வாரி வழங்கிய பாரியின் சொந்த நிலம். மூவேந்தர்கள் தாக்கியதால் தந்தையையும் இழந்து தரணியையும் இழந்த பாரி மகளிர்
பாடியதாக எழுதப்பட்ட புறநானுாற்றுப் பாடல் அங்கு செல்லும்போதெல்லாம் விழிகளின் ஓரத்தில் ஈரத்தை வரவழைக்கும்.

''அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம் என்குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்று எறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே''
முசிறியில் முரசுக் கட்டிலில் மோசிகீரனார் தூங்கியபோது அரசர் சாமரம் வீசி புலமையைப் பெருமைபடுத்திய சம்பவம் அந்த ஊரைக் கடக்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும்.
''அரசாங்கக் கட்டடத்தில் தூக்கம் போட்ட முதல் நபர் மோசிகீரனார்தான்'' என்கின்ற ஞானக்கூத்தனின் நையாண்டியும் சிரிப்பை வரவழைக்கும்.
அதைப்போலவே'நின்றுகொண்டிருப்பதைவிட சென்றுக் கொண்டிருக்கலாம்'' என்பது இயக்கத்தையும், அனுபவத்தையும் வெளிப்படுத்தும். 
ராஜசுந்தரராஜன் எழுதிய ''தகுதி'' என்ற கவிதை இயற்கையின் தொடர் சங்கிலியை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்துகிறது:

''ஒரு பறவையிட்ட
எச்சத்தின் நிழலில்
அயர்கிறோம் நானும் என் மந்தையும்
அது மரமாகி நிற்கிறபடியால்.''

சுற்றுலாவிற்ககுத் தாயாரிப்பு :

விவேக சிந்தாமணியில் சுற்றுலாவிற்கு என்னென்ன பொருள்களை எடுத்துச் செல்வது என்பது குறித்து ஒரு பாடல் உண்டு.

''தண்டுல மிளகின் தூள் புளி உப்பு
தாளிதம் பார்ததும் எதேஷ்டம் தாம்புநீர் தோற்றம்
ஊன்றுகோல் ஆடை
சக்கிமுக்கி கைராந்தல்
கண்டகம் காண்பான் பூசை முஸ்தீபு
கமற்குடை ஏவல் சிற்றுண்டி
கம்பளி ஊசிநூல் எழுத்தாணி
கரண்ட கண்கண்ட மேற்றங்கி
துண்டும் மோரிக்காய் கரண்டி நல்லெண்ணெய்''



கோவலன் மதுரைக்குப் போனது வர்த்தகச் சுற்றுலா. சிலப்பதிகாரத்தில் மதுரை மாநகர் குறித்து வருகின்ற விவரிப்புகள் அங்கே செல்கிற போதெல்லாம் மனத்தை மகிழ்விக்கும் 




கை நதி பெருக்கெடுத்து ஓடும் அழகை வியக்கும் பதிவுகளே. அதே வைகை ஆறும் நாம் சுற்றுச் சூழல் சுற்றுலாப் பேணாத காரணத்தால் எப்படி சிறுத்துக் 




கால்வாயாக, கழிவுகளின் வாய்க்காலமாக மாறிவிட்டது என்பதைப் பார்த்தசாரதி ஆங்கிலத்தில் எழுதிய வைகை பற்றி கவிதையில் தெரிந்துகொள்ளலாம்.

பரிபாடல் முழுவதுமே வை


கவிஞர் கண்ணதாசன்,

''காவிரி தெண்பெண்ணை பாலாறு
தமிழ்க் கண்டதோர் வையை பொருநை நதியென
மேவிய ஆறு பலவற்றிலும் வெள்ளை
மணல் பரவிக்கிடக்கும் தமிழ்நாடு''

என்று புதிய தமிழ்நாடு பற்றிக் புகன்ற வரிகள் வருத்தத்திலும் சிரிப்பை வரவு வைக்கும்.

ஒரே பாடல் மூலம் உலகப் புகழ்பெற முடியும் என்பதற்கு தமிழில் கணியன் பூங்குன்றனாரும்,ஆங்கிலத்தில் 'தாமஸ் கிரே' வும் சான்றுகள் பூங்குன்றனார் பிறந்த சவகங்கை 


மாவட்டத்து மகிபாலன்பட்டி, அவர் ''யாதும் ஊரே'' என்று அறைகூவியதன் காரணத்தினாலேயே குடத்திலிட்ட விளக்காய் 





துறையின் கடமை. மயிலாடுதுறைக்கு அருகிலிருக்கும் தேரெழுந்தூர் கம்பர் பிறந்த இடம். அங்கிருக்கும் மணிமண்டபம் சந்தங்கள் ஒலிக்கும் தூண்களின் கூடம். தருமபுரியிலிருந்து 
இருக்கிறது. அதைக் குன்றிலிட வேண்டியது சுற்றுலாத் 


தகடூர் ஒளவைக்கு நெல்லிக்கனி தந்த அதியனின் இருப்பிடம். கொல்லிமலை வல்வில் ஓரியன் அப்போதைய அரசாங்கம். அங்கே கடையேழு வள்ளல்களில் கலைக்கூடம் எழுப்பப்பட 

விருக்கிறது. கல்லணை கரிகாற் பெருவளத்தானின் கட்டடத் திறனுக்கு அத்தாட்சி. 

மணிமேகலையில் கரிகாலன் முதுமை வேடமிட்டு, தீர்ப்பு சொல்லி திருப்தி ஏற்படுத்திய
''மதுமலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும்
இளமை நாணி முதுமை யெய்தி
உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு''

இலக்கியச் சின்னங்கள்:


தாஜ்மகாலை 'உறைந்த கண்ணீர்த் துளி' என்று கவிஞர் ஒருவர் உருவகப்படுத்தியிருப்பார். தமிழகத்தில் இலக்கியம் புனைந்தவர்களின் நினைவுகளைக் கிளர்ந்தெழ வைக்கும்பொருட்டு,அரசு பல நனைவுச்சின்னங்களை உருவாக்கி வருகிறது. ''யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்'' என்ற மக்கள் கவிஞர் 

பாரதிக்கு எட்டயபுரத்தில் மணிமண்டபம், திருவல்லிக்கேணியில் நினைவு இல்லம். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதற்கு காற்று இன்னும் மார்பில் அடித்துக்கு கொள்ளும்.

-

No comments:

Post a Comment