வரலாறு உனது
சிந்தனை கவிஞர் கவிதாசன்
வரலாறு பேசும்தகுதியின் விளிம்பில்
நீ தவம் இருந்தால்
வாய்ப்புகள்
உன்னிடம் வாய்புக்கேட்கும்!
எழுச்சியின் முகட்டில்
நீ ஏறி நின்றால் -
விடியல்கள்
உன்னிடம் வெளிச்சம் கேட்கும்!
சுறுசுறுப்பின் விழுதுகளில்
நீ ஊஞ்சலாடினால்-
மின்னல்
உன்னிடம் மின்சாரம் கேட்கும்!
வியர்வையின் புதல்வனாய்
நீ புறப்பட்டால்-
முன்னேற்றம்
உன்னிடம் முகவரி கேட்கும்!
பிரபஞ்சமெங்கும்
உனது மனதை விரித்தால்-
நட்பு
உன்னிடம் ஆயுள் கேட்கும்!
முயற்சியின் முதுகில்
சவாரி செய்தால்-
சாதனைகள்
உன்னிடம் தஞ்சம் கேட்கும்!
தினங்கள் தோறும்
திறமைகள் வளர்த்தால்-
தன்னம்பிக்கை
உன்னிடம் நம்பிக்கை கேட்கும்!
வீழ்ச்சிகள் தோறும்
எரிமலை ஆனால்
வரலாறுகள்
உனது வரலாறு பேசும்!!
.jpg)

Really nice poem thankyou.
ReplyDelete