About Me

My photo
India
என் பெயர் கா.சவதா என் பிறந்த ஊர் ஆம்பூர். நான் +2 வரை படித்திருக்கிறேன்.எனக்கு பிடித்தவை; கலைமகள்,சக்தி, போன்ற புத்தகங்களை படிப்பது வீடியோ கேம், நண்பர்களுடன் விளையாடுவது, போன்றவை எனக்கு பிடிக்கும். எஸ்.ஜே.எஸ்.ஆர் ஒய் இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர் நகராட்சி மூலமாக சாப்ட்விஷன் மல்டிமீடியா கணினி மையத்தில் இலவச கணினி பயிற்ச்சி பயின்று வருகிறேன்.

Monday, October 4, 2010

வரலாறு உனது

வரலாறு உனது
 சிந்தனை கவிஞர் கவிதாசன்
வரலாறு பேசும்
தகுதியின் விளிம்பில்
நீ தவம் இருந்தால்
வாய்ப்புகள்
உன்னிடம் வாய்புக்கேட்கும்!

எழுச்சியின் முகட்டில்
நீ ஏறி நின்றால் -
விடியல்கள்
உன்னிடம் வெளிச்சம் கேட்கும்!

சுறுசுறுப்பின் விழுதுகளில்
நீ ஊஞ்சலாடினால்-
மின்னல்
உன்னிடம் மின்சாரம் கேட்கும்!

வியர்வையின் புதல்வனாய்
நீ புறப்பட்டால்-
முன்னேற்றம்
உன்னிடம் முகவரி கேட்கும்!


பிரபஞ்சமெங்கும்
உனது மனதை விரித்தால்-
நட்பு
உன்னிடம் ஆயுள் கேட்கும்!


முயற்சியின் முதுகில்
சவாரி செய்தால்-
சாதனைகள்
உன்னிடம் தஞ்சம் கேட்கும்!

தினங்கள் தோறும்
திறமைகள் வளர்த்தால்-
தன்னம்பிக்கை
உன்னிடம் நம்பிக்கை கேட்கும்!

வீழ்ச்சிகள் தோறும்
எரிமலை ஆனால்
வரலாறுகள்
உனது வரலாறு பேசும்!!

1 comment: